திருக்குறள்

652.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.

திருக்குறள் 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.

பொருள்:

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.